மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் தொடர் கனமழை பெய்து இருந்தது. இதனால் பெரும்பாலான குடியிருப்புகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளதால், பலரும் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து உதவிகளையும் செய்ய ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும் உடனடித் தேவைக்கு ரூ.2,000 கோடி வழங்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும் கோரி இருந்தார். இதையடுத்து நிவாரணங்களை வழங்க முதற்கட்டமாக தமிழகத்திற்கு ரூ.450 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!