ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் டிக்கெட்டின் விலை குறைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் ரயில் பயணிகள் மிகவும் நிம்மதி அடைந்தனர். தற்போது இதற்கு மாறாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரயில் நிலையங்களில் வேலை பார்க்கும் போர்ட்டர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு போட்டர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்கள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக இனி வரும் நாட்களில் பயணிகளின் டிக்கெட் விலை உயரும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.