ஜனாதிபதி முர்முவின் வருகை.,,பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை! புவனேஸ்வரில் அதிரடி!!

0
ஜனாதிபதி முர்முவின் வருகை.,,பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை! புவனேஸ்வரில் அதிரடி!!
ஜனாதிபதி முர்முவின் வருகை.,,பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை! புவனேஸ்வரில் அதிரடி!!

ஒடிசாவிற்கு, இந்திய ஜனாதிபதி முர்மு வருகையையொட்டி பள்ளி,கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

அரை நாள் விடுமுறை:

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று (10.11.2022) ஒடிசாவிற்கு சென்றுள்ளார். இதையடுத்து புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாளைய மின்தடை (11.11.2022) – இப்போவே எங்கெங்கே கரண்ட் Cutன்னு பார்த்து வச்சுக்கோங்க மக்களே!!

மேலும், இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியான அறிக்கையில், வியாழன் அன்று ஒடிசாவிற்கு இந்திய ஜனாதிபதி 2 நாள் பயணமாக வருகிறார். இதன் காரணமாக புவனேஸ்வரில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் ,கல்லூரிகளுக்கு இன்று (10.11.2022) அரை நாள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் மதியம் 1 மணிக்கு மேல் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படும். இதையடுத்து மாலை 3.30 மணியளவில் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலுக்குச் குடியரசுத் தலைவர் செல்வார். இதை தொடர்ந்து புவனேஸ்வருக்கு வருவார். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 8 சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் முக்கிய நபர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here