விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் ஆலியா மானசா. இவருக்கு முதல் சீரியலிலேயே ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அந்த அளவிற்கு இவரது நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு அதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் ராஜா ராணி சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்தனர். இதனை தொடர்ந்து ராஜா ராணி 2வது சீசனில் நடித்து வந்தார் .
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அப்போது இவர் 2 வது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் அடுத்த சீரியலில் நடிக்க மாட்டார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆலியா அடுத்து புது சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அவரே அண்மையில் வெளியிட்டிருந்தார். அதற்காக அவர் பழையபடி தன்னுடைய உடல் எடையை 10 கிலோ வரை குறைத்துள்ளார்.
விஜய் டிவியில் உதயமாகும் புது சீரியல்.,அட., ஹீரோயின் இவங்க தானா? படுகுஷியில் இல்லத்தரசிகள்!!
இந்நிலையில் ஆலியா இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய புது ப்ராஜெக்ட்டுக்கு எல்லோருடைய சப்போர்ட் கண்டிப்பா இருக்கணும் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இன்று புது சீரியலுக்கு முதல் நாள் ஷூட்டிங் போறீங்களா? என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நீங்க எந்த சீரியலில் யாருக்கு ஜோடியாக நடிக்க போறீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ஆலியா புது சீரியல் குறித்த எந்த தகவலையும் இப்போது வரை வெளியிடவில்லை.