நடிகர் விஜய்யுடன், வாரிசு படத்தில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் கில்லி படத்திற்கு பின் 15 வருடங்களுக்கு பின் அவருடன் மீண்டும் இணைந்துள்ளதை குறிப்பிட்டு சுவாரஸ்ய பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
பிரகாஷ்ராஜ் பேட்டி:
நடிகர் விஜய் தனது பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடித்து வரும் இந்த 66-வது படத்தை, தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா, பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில், நடித்து வரும் பிரகாஷ்ராஜ் தளபதி விஜய் குறித்த முக்கிய பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, செல்லத்தோட வேலை பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பின்பு இப்பதான் மீண்டும் இணைகிறோம் என கில்லி படத்தின் நினைவுகளை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள், பழசை மறக்காமல் விஜய்யை செல்லம் என பிரகாஷ்ராஜ் அழைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பதிவிட்டுள்ளனர்.
படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.