2 படங்களிலும் நடித்து கிடைக்காதது இதில் தான் கிடைத்தது – ‘பூவே உனக்காக’ சீரியல் நாயகி ஓபன் டாக்!!

0

பூவே உனக்காக சீரியலில் பூவரசியாக நடித்து வரும் ராதிகா ப்ரீத்தி தனது சீரியல் அனுபவங்களை பற்றி கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூவே உனக்காக ராதிகா ப்ரீத்தி

பூவே உனக்காக சீரியல் தற்போது விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்ந்து வருகிறது.அதுவும் மகேஸ்வரியின் அனைத்து செயல்களையும் கதிர் கண்காணிக்க கடைசியில் அந்த உண்மையும் மகேஸ்வரிக்கு தெரிந்து விடுகிறது. இதனால் சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வம் அனைவர்க்கும் உள்ளது.

கதிரை பூவரசி எப்பொழுது ஏற்றுக்கொள்வார்?? ரத்தினவல்லியை கொலை செய்தது யார்? என்ற பல முடுச்சுகளுடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இதில் நாயகியாக நடிக்கும் ராதிகா பல முயற்சிக்கு பின்பு தான் இந்த சீரியலில் கமிட்டாகியுள்ளார். இவர் கன்னட திரையுலகில் 2 படங்களில் நடித்திருக்கிறார். அந்த இரண்டு படமுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.

சிறு வயதில் இருந்தே படத்தின் மீது இவருக்கு அதிக ஆர்வமாம். ஆனாலும் வீட்டில் இதற்கு ஒத்துக்கொள்ள வில்லையாம். பல தடங்கல்களை தாண்டி தான் நடிக்க வந்தாராம். இவருக்கு வெள்ளித்திரையை விட இந்த சின்னத்திரை தான் கைகொடுத்ததாகவும் கண்கலங்க பேசியுள்ளார் ராதிகா ப்ரீத்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here