பழம்பெரும் பிரபல மலையாள நடிகர் மரணம்…!துயரத்தில் ஆழ்ந்த திரையுலகம்!!!

0

மலையாள மொழி படத்தில் பிரபல நடிகராக இருந்தவர் கே.டி.எஸ் படனாயில். சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணத்தை தழுவி உள்ளார்.

மலையாளத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான அந்நியன் பாவா சேட்டன் பாவா என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகர்  கே.டி.எஸ் படனாயில். அவருக்கு வயது 88. இவர் மலையாள  மொழியில் பல படங்களில் துணை நடிகராக நடித்து புகழ் பெற்றவர். மேலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் தன்னுடைய முத்திரை பதித்தவர். மேலும் கிட்டத்தட்ட இவர் 60க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் வயது முதிர்ச்சி மற்றும் உடல்நல கோளாறு காரணமாக கொச்சியில் உள்ள இந்திரா காந்தி கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த இவர்,  சிகிச்சை பலன் அளிக்காததால்  இன்று காலை  மரணமடைந்தார். இவரின் இழப்பு மலையாள மொழியின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here