நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நீதிபதிகள் வழங்கும் உத்தரவுகளை, ஒரு சில அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் நிலுவையில் வைத்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்துள்ள பூம்புகார் கப்பல் கழகம், ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புகார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அதில் நிலுவைப் பாக்கியை உரிய வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறநிலைய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் இதுவரை வாடகை பாக்கி வராததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.