தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் கவர்ச்சியாக நடிக்க 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
முகமூடி நடிகை:
மிஷ்கின் இயக்கத்தில் தமிழில் ஜீவா ஜோடியாக ‘முகமூடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. தற்போது அருவா படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கப் போவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த வாய்ப்பு ராசி கன்னாவிற்கு சென்று விட்டது. இதனால் முகமூடி படத்திற்கு பிறகு தமிழில் எந்தப்படமும் இவர் நடிக்கவில்லை. ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தெலுங்கிலும் இவர் நடித்த படங்களும் வெற்றி அடைந்ததால் 2 கோடியாக இவரது சம்பளத்தை உயர்த்தினார்.
ஊரடங்கு முடிந்ததும் சல்மான் கான் ஜோடியாக இவர் நடிக்க உள்ள ‘கபி ஈத் கபி’ படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது. அதற்கடுத்து இன்னொரு இந்தி படத்தில் நடிக்க இவரை படக்குழுவினர் அணுகினர். ஆனால் படத்தில் கவர்ச்சி காட்சிகளும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளும் இருப்பதால் தனக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார். இதனால் படக்குழுவினர் குழம்பி போய் உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |