இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் பாகம் 2 குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன்:
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 29 தேதி திரையரங்கில் வெளியானது. இப்படம் அனைத்து ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி உலக அளவில் இதுவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் 450 கோடி வரை வசூல் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் வரலாறு காணாத கிட்டத்தட்ட 200 கோடி அள்ளி வசூல் சாதனை படைத்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி திரையரங்கில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 1 ன் படம் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.