பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ள மணிரத்தினம், அந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்ததன் ரகசியத்தை, சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெளிப்படை :
கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை, இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இறுதி கட்ட பிரமோஷன் பணிகளில், படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், படத்தின் நடிகர் நடிகைகளை தேர்வு செய்த முறை குறித்து, இயக்குனர் மணிரத்னம் சுவாரஸ்ய கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த படத்தில் உள்ள பிரபலங்கள் எல்லோரும் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு நடிகர்களுக்குள்ளும் உள்ள அந்த வரலாற்று கதாபாத்திரத்தை, அவர்கள் வெளி கொண்டு வர வேண்டும்.
நயன்தாராவால் ஹீரோக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை…, முன்னணி நடிகை எடுக்கும் புதிய அவதாரம்!!
அப்போதுதான் அது பார்ப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். அதை இந்த பிரபலங்கள் கணக்கச்சிதமாக செய்துள்ளனர். நான் சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது, படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரிய வரும் என தெரிவித்தார்.