ரேசன் கடைக்கு வாங்க – பொங்கல் பரிசு காத்திருக்கிறது!!

0
பொங்கல் பரிசு விநியோகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதையடுத்து, தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை அமல் படுத்தியிருந்தது. அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கவிருந்த பொங்கல் பரிசு தேர்தல் விதிமுறை விலக்கிக் கொள்ளப்பட்ட பின் விநியோகிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

மீண்டும் விநியோகம்

தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துவிட்டதையடுத்து, குறிப்பிட்ட 27 மாவட்டங்களில் இன்று அதாவது ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி, பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

என்னென்ன பரிசுகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here