தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் அரசு மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கத்துடன் பரிசு தொகுப்பும் வழங்கப்படும்.
இந்த வருடத்திற்கான பறித்தொகுப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நாளை(ஜன..,10) பொங்கல் பரிசுத்தொகையான ரூ.1000 வழங்கப்படவுள்ளது.
இதனால் மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். மேலும் மகளிர் உரிமைத்தொகையான ரூ.1000 இந்த தடவை முன்கூட்டியே வழங்கப்படவுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த தொகை நாளை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. இந்த பொங்கலுக்கு டபுள் டமாக்காவா?? என்று மக்கள் கொண்டாடி வருகின்றனர்.