நாடு முழுவதும் 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில் இம்முறை கூடுதலாக 4 சதவீதம் அதிகரித்து அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் பேசி வருகின்றனர். அதோடு HRA அல்லோவான்ஸ் X நகர ஊழியர்களுக்கு 27 லிருந்து 30 சதவீதமாகவும், Y நகர ஊழியர்களுக்கு 18 லிருந்து 20 சதவீதமாகவும், Z நகர ஊழியர்களுக்கு 9லிருந்து 10 சதவீதமாகவும் உயர்த்த வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசே முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் குறைந்த வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு தானா?? முழு நிலவரம் உள்ளே!!