உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாள் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நடப்பு ஆண்டில் வருகிற 15ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் வங்கிகளும் மூடி இருக்கும். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கு சம்பந்தமாக ஏதேனும் வேலை இருந்தால் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி,
- 2024 ஜன.13 – 2வது சனிக்கிழமை
- 2024 ஜன.14 – ஞாயிற்றுக்கிழமை
- 2024 ஜன.15 – பொங்கல் பண்டிகை
- 2024 ஜன.16 – திருவள்ளுவர் தினம்
- 2024 ஜன.17 – உழவர் திருநாள்
என தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிக்கு விடுமுறை வழங்கப்பட இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.