தமிழகத்தில் வருகிற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி இருக்கும் பலரும் சொந்த ஊருக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
இந்த சிறப்பு ரயில் தாம்பரம் to தூத்துக்குடிக்கு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும், தூத்துக்குடி to தாம்பரத்திற்கு ஜனவரி 15 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு சாமானிய ரயில் பயணிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? ஹேப்பியான வங்கி ஊழியர்கள்!!!