தமிழ், தெலுங்கு, கன்னடம் பல மொழிகளில் நடித்து இருப்பவர் ரம்யா கிருஷ்ணன் இவர் பாகுபலியில் முக்கிய வேடத்தில் நடத்தில் அதிக புகழ் பெற்றார். தற்போது இவரின் காரில் 102 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரம்யா கிருஷ்ணன்
கொரோனா தற்போது பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு சில பகுதிகளில் மதுக்கடைகள் திறந்ததால் அதனை வாங்கி புதுச்சேரிக்கு கொண்டு சென்ற நபரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது சென்னையில் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் காரில் 102 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இசிஆர் வழியாக சென்னைக்கு தடையை மீறிய புகாரில் கானத்தூர் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரம்யா கிருஷ்ணன் காரில் 96 பீர் பாட்டில்கள், 3 பிளாக் லேபிள் பிளாக், 3 பிளாக் லேபிள் ரெட் போன்ற மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.