ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ ஆன பழனிக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
எம்எல்ஏ.,விற்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாட்கள் செல்லச்செல்ல புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதன் வீரியம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் & செவிலியர்கள் என பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் பல மருத்துவர்கள் உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இயக்குனர் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் – மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்..!
தமிழகத்தில் முதல் முறையாக திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கட்சி சார்பாக மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் செய்து வந்த அவர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரும் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.