தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான பாரதிராஜா அவர்களின் பல படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவரும், பாரதிராஜாவின் நெருங்கிய நண்பருமான ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்.
ஒளிப்பதிவாளர் கண்ணன்:
இயக்குனர் பாரதிராஜா அவர்களின் நிழல்கள் முதல் பொம்மலாட்டம் வரை திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் கண்ணன். 69 வயதான இவர் சில தினங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர்க்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அது பலனளிக்காமல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தமிழன், தமிழன் அல்லாதவன் என்ற பிரிவினை வேண்டாம் – ஏ.ஆர். ரகுமான்..!
இவரது குடும்பமே கலைத்துறையில் புகழ்பெற்றது. இவரது தந்தை இயக்குனர் பீம்சிங், சகோதரர் எடிட்டர் லெனின் என அனைவரும் திரைத்துறையில் இருந்தவர்கள். கண்ணன் மற்றும் பாரதிராஜா இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவரை ‘பாரதிராஜாவின் கண்கள்’ என்றே அனைவரும் அழைப்பர். ஒரு பேட்டியில் இயக்குனர் பாரதிராஜா பேசுகையில் நான் படப்பிடிப்பிற்கு செல்லும் போது கேமரா எடுத்துச் செல்ல மாட்டேன். கண்ணனை உடன் கூட்டிச் செல்வேன் என கூறியிருப்பார். தற்போது இவரது இழப்பால் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.