சமீபகாலமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் துறை காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு, வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் 60,000 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதனால் அம்மாநில இளைஞர்கள் உட்பட சுமார் 50 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்து இருந்தனர்.
ஐயோ முடியல.., விடாமுயற்சி ஷூட்டிங் முடியுமா?? முடியாதா?? வெளியான ஷாக்கிங் நியூஸ்!!!
இவர்களுக்கான எழுத்துத் தேர்வும், கடந்த பிப்.17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு இருந்த நிலையில், சமூக வலைதளங்களில் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாக புகார் வெளியானது. அதனை உறுதி செய்த உத்திரபிரதேச அரசு, 50 லட்சம் பேர் எழுதிய தேர்வை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தேர்வர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.