தமிழ் சினிமாவில் எக்கசக்க பாடல்களை எழுதி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து. இவர் எழுதிய ஒவ்வொரு காதல் பாடல்களிலும் மங்கைகளை குறித்து இரட்டை அர்த்தத்தில் வரிகளை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் எழுதிய பல பாடல்கள் ஹிட் அடித்த போதிலும், பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதில் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோக 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
அடுத்தடுத்து திருமண சர்ப்ரைஸ் கொடுக்கும் திரைபிரபலங்கள்.., இப்படியே போன ரசிகர்கள் கதி அம்போ தான்!!
இது குறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், துருக்கியின் அடியில் உலகம் புரண்டு படுத்து விட்டது. மேலும் ரிக்டர் கருவிகள் வெடித்து சின்னாபின்னமாகி விட்டது. வானத்தை இடித்து கொண்டிருந்த கட்டிடங்கள் மண்ணில் சாய்ந்து விட்டது. அதுமட்டுமின்றி மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. உலக நாடுகள் ஓடி வரட்டும் கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்” என்று பதிவிட்டுள்ளார்.
துருக்கியின் கீழே
பூமி புரண்டு படுத்துவிட்டதுரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டனவான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டனமனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டனமாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்உலக நாடுகள்
ஓடி வரட்டும்கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்#TurkeyEarthquake pic.twitter.com/yJGWZWJjqj— வைரமுத்து (@Vairamuthu) February 7, 2023