இந்திய சினிமா துறையில் முன்னணி ஹீரோயினாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் கியரா அத்வானி. இவர் இயக்குனர் கபீர் சனாந் இயக்கிய ”புக்லி” என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இதன் பிறகு பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து எக்கச்சக்க படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது இவர் சத்திய பிரேம் கி கதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. என்னதான் கெரியரில் பிசியாக நடித்து வந்தாலும் மற்றொரு பக்கம் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் நேற்று திடீரென்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதை தொடர்ந்து தற்போது மீடியாவில் இவர்களின் திருமண செய்தி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் கியாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் தங்களின் திருமண புகைப்படங்களை பதிவிட்டு சில அழகிய வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார். அதாவது ”எங்களின் நிரந்தர முன்பதிவு இப்போது முடிந்தது”. மேலும் உங்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் தேடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.