லியோ படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகியதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து அவருடைய தாயார் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லியோ மூவி:
தற்போதைய சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருவது தளபதி நடிக்கும் லியோ படத்தைப் பற்றித் தான். இப்படத்தில் அதிக நட்சத்திரங்களை இணைத்து லோகேஷ் கனகராஜ் பெரிய சம்பவத்தை செய்ய இருக்கிறார். மேலும் இப்படம் LCU என்று டைட்டில் கார்டில் Hint கொடுத்தார் லோகேஷ். அதனால் தான் படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பது மட்டுமின்றி, அவருக்கு வில்லனாக 6 பேர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படக்குழுவினர்கள் மொத்தமாக தனி விமானம் பிடித்து காஷ்மீருக்கு சென்றார்கள். அதில் நடிகை த்ரிஷாவும் சென்றிருந்தார். ஆனால் படப்பிடிப்புக்கு சென்ற சில தினங்களில் த்ரிஷா மீண்டும் சென்னை திரும்பிவிட்டார். இதனால் நடிகை திரிஷா படத்தில் இருந்து விலகிவிட்டார் என நிறைய செய்திகள் சோசியல் மீடியாவில் பரவின.
ஆள விடுங்க, இனி இது என் படம் இல்லை.., சூசகமாக ஹின்ட் கொடுத்த இயக்குனர்! மீண்டும் கைமாறுதா AK 62?
இந்த நிலையில் இது குறித்து திரிஷாவின் தாயார் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, த்ரிஷா LEO படத்தில் இருந்து விலகியதாக வெளிவந்த எந்த ஒரு தகவலும் உண்மை இல்லை. எல்லாம் பொய்யானது என்று கூறியுள்ளார். தற்போது திரிஷா மற்ற நடிகர்களுடன் நடித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது த்ரிஷா லியோ படத்தில் இருக்கிறார் என்று தெரிய வருகிறது.