பார்டர் கவாஸ்கர் டிராபியுடன் இரு அணிகளின் கேப்டன்களும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பார்டர் கவாஸ்கர் டிராபி:
அதிக எதிர்பார்ப்பு நிறைந்த, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நாளை முதல் நடைபெற இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தொடரில், இந்திய அணி கடைசியாக நடைபெற்ற 3 டிராபியையும் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை இந்திய அணி தக்கவைக்கும் முனைப்பில் களமிறக்க உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டிராபியானது, நாக்பூர் (பிப்ரவரி 9-13), டெல்லி (பிப்ரவரி 17-21), தரம்சாலா (மார்ச் 1-5) மற்றும் அகமதாபாத் (மார்ச் 9-13) ஆகிய இடங்களில் குறிப்பிட்ட தேதியில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு நாக்பூரில் உள்ள விசிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பிரைம் வாலிபால் லீக் (PVL) புள்ளிப் பட்டியல் வெளியீடு…, முதலிடத்தில் காலிகட் ஹீரோக்கள்!!
இந்நிலையில், இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மாவும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இருவரும் இணைந்து பார்டர் கவாஸ்கர் டிராபியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த டிராபியை யார் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து உள்ளது.