தீபாவளி வரை ரேஷனில் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள்:
நிலவும் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். கோவிட் -19 கடந்த நூற்றாண்டில் தாக்கிய மிகப்பெரிய தொற்றுநோய் என்றும், அதை அனைத்து நாடுகளும் பல்வேறு வகையில் போரிட்டு வென்றோம் என்றும் மோடி கூறினார்.
“கோவிட் மருத்துவமனைகள், வென்டிலேட்டர்கள் படுக்கைகள், சோதனை ஆய்வகங்களை தயாரிப்பதற்காக 1.5 ஆண்டுகளில் புதிய சுகாதார உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் 2 வது அலைகளின் போது, மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை முன்னோடியில்லாத விகிதத்தில் அதிகரித்தது” என்று மோடி மேலும் கூறினார்.
மேலும் தீபாவளி வரை 800 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச உணவு தானியங்கள் நிலையான அளவில் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். முழு ஊரடங்கில் தளர்வுகளை மாநில அரசுகள் அறிவிக்கும் போது, கொரோனா முடிந்துவிட்டதாக மக்கள் எண்ணக்கூடாது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மக்கள் இந்த போரினை வெல்ல வேண்டும், எனக் கூறினார்.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!