ஜூன் 21 முதல் அனைவருக்கும் இனி இலவச தடுப்பூசி – பிரதமர் மோடி அறிவிப்பு!!!

0

இந்தியாவில் இனி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் 21ம் தேதி முதல் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா பரவலை ஒன்றிய அரசு எதிர்கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. முக்கியமாக தடுப்பூசி ஆர்டர் செய்வதிலும், அதை மாநில அரசுகளுக்கு ஒதுக்குவதிலும் தோல்வி அடைந்துவிட்டதாக மத்திய அரசு மீது புகார் வைக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் பல பகுதிகளில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.

 

பிரதமர் மோடி கொரோனா தொற்று குறித்து இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் அவர், “உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது.நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்யும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக ஜூன் 21 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும்.மாநில அரசுகள் இனி தனியாக தடுப்பூசி கொள்முதல் செய்யத்தேவையில்லை.இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவிகித்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்கு செலுத்தலாம்.இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்”. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here