பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி
கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் அவசரகால பயன்பாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட 3 கோடி முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மீண்டுமாக இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. முன்னதாக பல அரசியல்வாதிகளும், தலைவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதனால் கொரோனா தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி செலுத்திக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தது.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் – சிபிசிஐடி வழக்கு பதிவு!!
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் விரைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். கொரோனா தடுப்பூசியைக்கண்டு பயப்பட வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவிலிருந்து கொரோனாவை ஒழிப்போம்’ என பதிவிட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் புதுச்சேரியைச்சேர்ந்த செவிலியர் நிவேதா என்பவர் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.