சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் சிறப்பாக கையாளும் தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்து உள்ளது.
சர்வதேச நிறுவன ஆய்வு:
கொரோனா வைரஸ் தாக்கத்தை சிறப்பாக கையாளும் உலக நாடுகளின் தலைவர்கள் குறித்து ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற சர்வதேச நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. தற்போது அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 68 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து 36 புள்ளிகளுடன் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் 2-வது இடத்திலும், 35 புள்ளிகளுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
26 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 2 லட்சத்தை நெருங்கும் உயிர்பலி – உலக நாடுகளில் கொரோனா ஒரு பார்வை..!
இந்தியாவில் 21 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 41 பேர் உயிரிழப்பு..!
உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் இந்த பட்டியலில் மைனஸ் 3 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கு மைனஸ் 21 புள்ளிகளுடன் 9-வது இடமும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு மைனஸ் 33 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |