இன்று இரவு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் உரையாட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா:

இந்தியாவில் இதுவரை 70,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,293 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 22,455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 11) காணொளிக்காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் ஆலோசனை நடத்தினார். அதில் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தியாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பா..? பிரதமர் மோடி கூறிய மறைமுக தகவல்..!

இந்தியாவில் மே 17 உடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. இதில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here