இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்து உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
முதல்வர்கள் ஆலோசனை:
பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்ட வீடியோ கான்பெரன்ஸிங் முறையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.
மேலும் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவு செய்து இருப்பது மிகச் சரியானது எந்த தெரிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி ஊரடங்கை நீட்டிக்கா விட்டால் இதுவரை நாம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகி விடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |