இந்தியாவிலும் கொரோனா வைரஸ் 28 பேருக்கு பரவியுள்ளதால் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்க்க பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா முடிவு செய்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.
28 பேருக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..!
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் மருந்துகள் தேவை அதிகரிக்கும் என்பதால் பிற நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளிலும் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
பொதுநிகழ்ச்சிகள் தவிர்ப்பு..!
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொது நிகழ்ச்சிகளை தவிர்க்க பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா முடிவு செய்துள்ளனர். மேலும் மக்கள் அதிகம் ஒரு இடங்களில் கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஹோலி கொண்டாட்டங்களில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டுள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |