தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.., விடைத்தாள் திருத்தும் பணி.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று முதல் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ராம நவமியால் தேதி மாறும் IPL போட்டி?? வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here