IPL தொடரின் 17வது சீசன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி (51 ரன்கள்) அரைசதம் அடித்து அசத்தினார்.
இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 171 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 16 பந்தில் 37 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.