மாதாந்திர ஊதியம் பெறும் ஊழியர்களின் ஓய்வூதிய நலன் கருதி PF தொகை, மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணத்தை மருத்துவ சிகிச்சை, திருமணம், வீடு புதுப்பித்தல்/கட்டுதல் உள்ளிட்ட அவசர காலங்களில், குறிப்பிட்ட தொகையை ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம். அப்படி முழுத் தொகையையும் பெற வேண்டுமெனில், அதற்கும் இரண்டு நிபந்தனைகளை நிர்ணயித்துள்ளனர்.
அதன்படி,
1. ஊழியர்களுக்கு 60 வயதுக்கு மேல் ஓய்வு பெற்ற பிறகு முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம்.
2. வேலையில்லாமல் ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கும் பட்சத்தில், 75 சதவீத PF தொகையை திரும்பப் பெறலாம். அந்த நிலை கூடுதலாக இரண்டு மாதங்கள் தொடரும் பட்சத்தில், மீதமுள்ள 25 சதவீதத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம்.
Enewz Tamil WhatsApp Channel
வருமான வரி தாக்கல் செய்ய இதுதான் கடைசி தேதி., இல்லையென்றால் சிக்கலாகிவிடும்!!!