நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு தனி நபரும், வணிகங்களில் ஈடுபடுவோரும் ஒவ்வொரு வருடமும் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமான ஒன்றாக உள்ளது. மேலும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்போது 2023-24 ஆம் ஆண்டுக்கான வருமான வரியை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதை தவிர விடுவோர் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை கொடுத்த கால அவகாசத்திற்குள் வருமான வரி செலுத்தவில்லை என்றால் அவர்களது வருமான தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக ஒரு நபர் வருடத்திற்கு 5 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் அவர்கள் 5000 அல்லது 10,000 வரை பெனாலிட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.