பட்ஜெட் தாக்கல் எதிரொலி – பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு!!

0

இன்று நாடாளமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல்:

நாள்தோறும் கச்சா எண்ணெய் விலைகேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வந்தனர். இதனை முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்வார்கள். மேலும் இதன் புதிய விலை காலை 6 மணி முதல் அமலுக்கு வரும். தற்போது நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கொரோனா காலத்தில் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இதுவே. தற்போது பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பல அறிக்கையை அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG டெஸ்ட் தொடர் – சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி!!

அதில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றி ஓர் அறிக்கையை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் கூட்டமைப்பு மேம்பட்டு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளை முதல் 1 லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.2.50 மற்றும் 1 லிட்டர் டீசல் விலையில் ரூ.4 அதிகரிக்க உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்து விலை உயர்வை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here