இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. தற்போது இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது பிசிசிஐ. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியா vs இங்கிலாந்து:
தற்போது வரும் 5ம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டி அஹமதாபாத் மைதானத்திலும் வைத்து நடைபெற உள்ளது. தற்போது கொரோனா பரவல் இந்தியாவில் குறைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் வைத்து நடைபெறும் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதி குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் அதை பற்றி தகவல் வராமல் அகமதாபாத்தில் வைத்து நடைபெறும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்க பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதாவது சுமார் 50,000கும் மேற்பட்ட ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 3 வது டெஸ்ட் போட்டியின் போது இந்தியா பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதி குறித்து ஓர் தகவல் வெளியாகியுள்ளது.
தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை – வானிலை மையம் தகவல்!!
அதன்படி சென்னையில் வைத்து வரும் 5ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் மற்றும் வரும் 13ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண்பதற்கு தற்போது ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சென்னையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை கிரிக்கெட் அசோசியேசன் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.