நேற்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மற்றும் டீசலின் மீது கூடுதல் வரி விதிக்கப்படப்போவதாக அறிவித்தார். இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயரும் என்று அனைவரும் கருதினர். தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல்:
நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பல அறிக்கைகளை வெளியிட்டார். அதில் ஒன்று தான் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றிய அறிக்கை. அதில் அவர் அறிவித்ததாவது, பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தி மீது கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கும் என்று அனைவரும் பயந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவர் விதித்த கூடுதல் வரியினால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.50 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ. 4 அதிகரிக்கும். இதனால் நுகர்வோருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கும் என்று கருதி வந்தனர். ஆனால் நுகர்வோர்கள் இந்த கூடுதல் வரி காரணமாக பாதிக்கப்படமாட்டார்கள் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளத்தில் அத்துமீறிய ரசிகர் – பதிலடி கொடுத்த லட்சுமி மேனன்!!
தற்போது இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.88.82 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் லிட்டர் ரூ.81.71 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.