இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெளி வந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்:
கடந்த 2 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் 2 தினங்களுக்கு முன்பாக இந்தியாவில் பெட்ரோலின் விலை ரூ.100 ஐ தாண்டியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் வேதனை அடைந்தனர். மேலும் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் உற்பத்திக்கு கூடுதல் வரி விதிப்பு செய்தனர். இதுவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்று கூறி வருகின்றனர். தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நீக்கம் – தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு!!
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.91.45 ஆகவும், மற்றும் டீசல் லிட்டர் ரூ.84.77ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.91.68 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.85.01 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. தொடர் விலை உயர்வால் தற்போது வாகன ஓட்டிகள் வாகனத்தை பயன்படுத்துவதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.