தமிழகத்தில் பனிரெண்டாம் மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தற்போதிலிருந்து படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு பொது தேர்வு
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்று வந்தனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சவால் நிறைந்த ஒன்றாக இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
அதே போல் தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருந்தது. இதனால் பொது தேர்வுகள் தள்ளி போக வாய்ப்புகள் இருந்தாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தது. இதனை அடுத்து தற்போது பனிரெண்டாம் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் மே 3 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு தேர்வுகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 21 ஆம் தேதி பொது தேர்வுகள் முடியுள்ளன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மாணவர்களுக்கு காலை 10.15 மணி அளவில் தேர்வுகள் துவங்கும் என்றும் நண்பகல் 1.15 மணிக்கு தேர்வுகள் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்விற்கு மாணவர்கள் தற்போது முதல் படிக்கச் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.