இந்தியாவில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாயும் கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் சில்லறை விற்பனை விலை உயருமா? என்ற கேள்விக்கும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
வருவாய் இழப்பு:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். தொழில்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை பெருமளவு சரிந்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் குறைந்து உள்ளது. இதனால் அரசுக்கு கிடைக்கும் கூடுதல் கூடுதல் நிதியை கொண்டு , ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடு செய்யும் நோக்கில் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாயும், சாலை செஸ் (cess) வரி 8 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று டீசலுக்கு சிறப்பு கூடுதல் கலால் வரியாக 5 ரூபாயும், சாலை செஸ் (cess) வரியாக 8 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டிற்கு கூடுதலாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்கிடைக்கும். ஆனால் சில்லறை விற்பனையில் எவ்வித விலை மாற்றமும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |