தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலைகள் மறுக்கப்படுகின்றன என்று எழுத்து வந்த குற்றசாட்டை அடுத்து சென்னையில் உள்ள ICF நிறுவனம் தமிழக இளைஞர்கள் மட்டும் அப்ரண்டிஸ் எனப்படும் தொழில் பழங்குநருக்கான தொழில்துறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழக இளைஞர்கள்:
தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மத்திய அரசுத்துறை வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதிலும் குறிப்பாக ரயில்வே பணியிடங்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறப்பட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இப்படியான நிலையில், சென்னையில் உள்ள ICF நிறுவனம் தற்போது அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கூடுதல் கவனம் பெற காரணம் அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் விவரங்கள்:
அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பில் 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைப்பு!!
அப்படி விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் கட்டணமாக 100 ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ICF அதிகாரப்பூர்வ இணையதளமான www.pbicf.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு