இந்தியாவில் மிகவும் பிரபலமான பேடிஎம் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனை, சற்று வேகமாக இருப்பதால் எண்ணற்ற பயனாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் வங்கி விதிமுறைகளை மீறியதாக Paytm Payments Bank (PPBL), பிப்ரவரி 29 க்கு பிறகு தடை செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. அதற்குப் பின்னர் அந்த உத்தரவை மார்ச் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தது.
தமிழகத்தில் பிளஸ் 2 தமிழ் தேர்வு.., இத்தனை பேர் எழுதவில்லையா.., தேர்வுத்துறை அதிர்ச்சி தகவல்!!!
இந்நிலையில் தற்போது Paytm நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய நிதி நுண்ணறிவு பிரிவினர் நடத்திய விசாரணைக்குப் பிறகு Paytm Payments வங்கிக்கு ஐந்து கோடியே 45 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும், PPBL-ன் கீழ் இயங்கும் Paytm UPI சேவையை, வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்க தேவையான நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.