தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதன்படி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,302 தேர்வு மையங்களில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு முடிந்த பின் மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத் தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில் மொழிப்பாடத் தேர்வினை மட்டும் மாதம் 13,407 மாணவர்கள் எழுதவில்லை என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் பள்ளி மாணவர்கள் 12,364 பேரும், தனித்தேர்வர்கள் 1,043 பேரும் எழுதவில்லை என தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது.