நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்து வருகின்றனர். அந்த வகையில் முதன் முதலாக ஆந்திர மாநிலத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது இதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் புதிய ஓய்வூதிய திட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது அங்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று திருத்தப்பட்ட தேசிய ஓய்வூதிய திட்டத்தை சட்டமன்றத்தில் அறிவித்தார். அதாவது இப்போது அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை அகவிலைப்படி 46 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 50 சதவீதமாக உயரும் என தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின்படி மாநிலத்தில் பணி புரியும் 13.45 லட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.