உலகமே டிஜிட்டலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சில விஷயங்கள் தற்போது வரை மாறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக பாலியல் கொடுமை சிறுமி முதல் முதியவர்கள் வரை நடைபெற்று வருகிறது. இது மாதிரியான பாலியல் கொடுமைகளை கட்டுப்படுத்த அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே சில பகுதிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டேனியல்(62) என்ற மதபோதகர் தன் வீட்டில் சமையல் வேலை பார்த்த செல்வி என்ற பிரின்சி (45) என்பவரை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை நேற்று அதிகாலை 2 மணிக்கு பாலியல் உறவுக்கு டேனியல் அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரின்சி சைக்கிள் பல் சக்கரத்தால் அடித்து கொலை செய்தார். இதனை தொடர்ந்து மாத்துார் போலீசார் பிரின்சியை கைது செய்து விசாரிக்கின்றனர்.