தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் வினோதமான சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த சன் என்பவரின் மகள் தான் சியாடன்(16). சன்னுக்கு மூன்று பிள்ளைகள் இருந்ததால் குடும்பத்தை சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை என்பதாலும் சரியான பணவசதியும் இல்லாததால் சியாடனை தத்து கொடுத்தனர்.
இந்நிலையில் சியாடன் 12 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அவரின் இறுதி சடங்கு தத்தெடுத்த பெற்றோர்கள் வீட்டில் நடைபெற்றது. அப்போது அந்த சிறுமிக்கு ஒரு இளைஞனை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்காக 66,000-யுவான் (7.75 லட்சம்) பெற்றுள்ளனர். பேய் திருமணங்கள் சீனாவில் 3,000 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.