நாடு முழுவதும் கொடிய நோய் தொற்று பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிம்லாவில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழாவில் கலந்து கொண்ட ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அடுத்த நிதியாண்டில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.