வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் 5-ந் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் புயல் காரணமாக வேதாரண்யத்தில் கடல் திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் புயல் காரணமாக கடல் உள்வாங்கி இருக்கும் என தெரிவித்துள்ளனர்.