ஜீவாவை தன் பக்கம் இழுக்க திட்டமிடும் ஜனார்த்தனன் – முறியடிப்பாரா சத்தியமூர்த்தி?? விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்று குழந்தையை பார்க்க சென்ற கண்ணாவை ஜனார்த்தனன் அசிங்கப்படுத்துகிறார். மேலும் குழந்தையை காட்ட மறுக்க ஜீவா அதை மீறி குழந்தையை பார்க்க உள்ளே அழைத்து செல்கிறார். இந்நிலையில் இன்று சத்தியமூர்த்தி குழந்தையை பார்க்க செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

நேற்றைய எபிசோடில் கண்ணா ஆசையாக ஜீவாவின் குழந்தையை பார்க்க சென்றார். ஆனால் ஜனார்த்தனன் கோவப்பட்டு குழந்தையை காட்ட வேண்டாம் என்று மீனாவிடம் சொல்ல அவரும் வேறு வழியில்லாமல் குழந்தை தூங்குவதாக பொய் சொல்கிறார். இதனால் கோவமடையும் ஜீவா, கண்ணனை உள்ளே அழைத்து சென்று குழந்தையை காட்ட கண்ணா குழந்தையை கொஞ்சுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஜீவா மீனாவின் அப்பாவை இந்த மாதிரி செய்ததற்கு திட்டுகிறார். இதனால் மீனாவும் கோவமடைகிறார். இன்றைய எபிசோடில் கஸ்தூரியின் அக்கா இறந்ததை அடுத்து அவர்களுக்கு இருக்கும் ஒரே பெண்ணான ஐஸ்வர்யாவை பார்க்க முல்லையும் கதிரும் செல்கின்றனர். அங்கு கஸ்தூரி அழுது கொண்டிருக்க முல்லை அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

உள்ளே இருந்து வரும் ஐஸ்வர்யா முல்லையை பார்த்ததும் கதறி அழுகிறார். முல்லையும் அவரை கட்டிப்பிடித்து அழுகிறார். முல்லை ஐஸ்வர்யாவிற்கு எவ்வளவு ஆறுதல் கூறியும் அவர் சமாதானம் ஆகவில்லை. அடுத்ததாக சத்தியமூர்த்தி குழந்தையை பார்க்க மீனாவின் வீட்டிற் கு செல்கிறார். குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கும் சத்திய மூர்த்தியை பார்த்த ஜனார்த்தனன் ஜீவாவை தன் கடையை பார்த்துக்கொள்ள அனுப்பும்படி கூறுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் சத்தியமூர்த்தி தானும் சூப்பர் மார்க்கெட் வைக்கப்போவதாகவும் அதை பார்த்துக்கொள்வதற்கே எங்கள் நான்கு பெருக்கும் நேரம் பத்தாது. இதில் உங்க கடையை எப்படி ஜீவா பார்ப்பான். என்று கூறுகிறார். மேலும் தனக்கு தெரிந்த ஆள் இருந்தால் சொல்கிறேன் என்று கூற ஜனார்த்தனன் கோவமடைகிறார்.

சத்திய மூர்த்தி அங்கிருந்து சென்றதும் அவரை கண்டபடி பேசுகிறார். அடுத்ததாக முல்லை ஐஸ்வர்யாவை தன் வீட்டில் 2 நாட்கள் தங்க வைத்துக் கொள்வதாக கூறுகிறார். கஸ்தூரியும் சரி என்று கூற ஐஸ்வர்யாவை அழைத்து செல்கின்றனர். இதை வைத்து பார்க்கும்போது ஒரு வேலை கண்ணாவிற்கு ஜோடியாக இருக்குமோ?? என சந்தேகம் எழுகிறது. இனி வரும் எபிசோடுகளில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடக்கவுள்ளது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here